Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கண்ணமங்களா பகுதியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறையின் நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சித் துறையின் நிலைக்குழு உறுப்பினரான நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் கலந்து கொண்டார்.
இந்த ஆய்வின் போது மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உயர் அதிகாரிகளும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில விவசாய அணி இணை செயலாளர் D.S.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.